கோவையில் கடந்த 22ஆம் தேதி 3 வெவ்வேறு இடங்களில், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மற்றும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை: கோவையில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்குண்டு வீச்சு மற்றும் பேருந்து கண்ணாடிகளை உடைத்த வழக்கில் தொடர்புடைய ஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரவு பாஜக மாவட்ட அலுவலகம், 100 அடி சாலை பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் மோகன் என்பவரது கடை மற்றும் ஒப்பணக்காரர் வீதியில் உள்ள மாருதி செலக்சன் என்ற ஜவுளிக்கடை ஆகிய 3 இடங்களில் மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில், ஒப்பணக்காரர் வீதி ஜவுளி கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சுங்கம் சிந்தாமணி நகரை சேர்ந்த எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் (30), என்பவரை கைது செய்தனர்.
மேலும் 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடையில் குண்டு வீசியதாக முகமது ரஃபீக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய துடியலூர் பகுதியை சேர்ந்த பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (26) என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இதேபோல், கோவை என்.எச் சாலையில் சென்று கொண்டிருந்த 21ஏ எண் கொண்ட அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, கண்ணாடிகளை உடைத்த வழக்கில், உக்கடம் அன்பு நகர் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஷாஜகான் (41) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
நான்கு பேரையும் கோவை மாநகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரவு பாஜக மாவட்ட அலுவலகம், 100 அடி சாலை பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் மோகன் என்பவரது கடை மற்றும் ஒப்பணக்காரர் வீதியில் உள்ள மாருதி செலக்சன் என்ற ஜவுளிக்கடை ஆகிய 3 இடங்களில் மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில், ஒப்பணக்காரர் வீதி ஜவுளி கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சுங்கம் சிந்தாமணி நகரை சேர்ந்த எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் (30), என்பவரை கைது செய்தனர்.
மேலும் 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடையில் குண்டு வீசியதாக முகமது ரஃபீக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய துடியலூர் பகுதியை சேர்ந்த பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (26) என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இதேபோல், கோவை என்.எச் சாலையில் சென்று கொண்டிருந்த 21ஏ எண் கொண்ட அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, கண்ணாடிகளை உடைத்த வழக்கில், உக்கடம் அன்பு நகர் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஷாஜகான் (41) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
நான்கு பேரையும் கோவை மாநகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.