100 அடி ரோடு மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது.

கோவையில் கடந்த 22ஆம் தேதி 3 வெவ்வேறு இடங்களில், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மற்றும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: கோவையில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்குண்டு வீச்சு மற்றும் பேருந்து கண்ணாடிகளை உடைத்த வழக்கில் தொடர்புடைய ஸ்.டி.பி.ஐ மற்றும் பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரவு பாஜக மாவட்ட அலுவலகம், 100 அடி சாலை பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் மோகன் என்பவரது கடை மற்றும் ஒப்பணக்காரர் வீதியில் உள்ள மாருதி செலக்சன் என்ற ஜவுளிக்கடை ஆகிய 3 இடங்களில் மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன.

இந்நிலையில், ஒப்பணக்காரர் வீதி ஜவுளி கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சுங்கம் சிந்தாமணி நகரை சேர்ந்த எஸ் டி பி ஐ கட்சியை சேர்ந்த அப்துல் ரகுமான் (30), என்பவரை கைது செய்தனர்.

மேலும் 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடையில் குண்டு வீசியதாக முகமது ரஃபீக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய துடியலூர் பகுதியை சேர்ந்த பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (26) என்பவரையும் கைது செய்துள்ளனர்.

இதேபோல், கோவை என்.எச் சாலையில் சென்று கொண்டிருந்த 21ஏ எண் கொண்ட அரசு பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தி, கண்ணாடிகளை உடைத்த வழக்கில், உக்கடம் அன்பு நகர் பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த ஷாஜகான் (41) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

நான்கு பேரையும் கோவை மாநகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...