விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.
கோவை: விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூரில் உள்ள ஐயப்பசாமி கோவிலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில், விஜயதசமியை யொட்டி வித்யாரம்ப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 7:30 மணி முதல் நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும், பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, குழந்தைகளுக்கு வித்யாரம்ப பூஜைக்கு தேவையான பச்சரிசி, வெற்றிலை பாக்கு, ஆண் குழந்தைகளுக்கு தேவையான சிறிய வேஷ்டி, உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும்.
பஜனை மண்டபத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி வழங்கும் நாட்டியாஞ்சலி, தேவி நாட்டியாஞ்சலி வழங்கும் நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில், விஜயதசமியை யொட்டி வித்யாரம்ப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 7:30 மணி முதல் நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும், பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, குழந்தைகளுக்கு வித்யாரம்ப பூஜைக்கு தேவையான பச்சரிசி, வெற்றிலை பாக்கு, ஆண் குழந்தைகளுக்கு தேவையான சிறிய வேஷ்டி, உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும்.
பஜனை மண்டபத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி வழங்கும் நாட்டியாஞ்சலி, தேவி நாட்டியாஞ்சலி வழங்கும் நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.