விஜயதசமி: சித்தாபுதூர் ஐயப்ப சாமி கோவிலில் அக்.5-ல் வித்யாரம்ப நிகழ்ச்சி - முன்பதிவு துவக்கம்

விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.


கோவை: விஜயதசமியை முன்னிட்டு சித்தாபுதூரில் உள்ள ஐயப்பசாமி கோவிலில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தாபுதுார் ஐயப்பசுவாமி பொற்கோவிலில், விஜயதசமியை யொட்டி வித்யாரம்ப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் அக்டோபர் 5ஆம் தேதி வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காலை 7:30 மணி முதல் நடைபெறவுள்ள வித்யாரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும், பெற்றோர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, குழந்தைகளுக்கு வித்யாரம்ப பூஜைக்கு தேவையான பச்சரிசி, வெற்றிலை பாக்கு, ஆண் குழந்தைகளுக்கு தேவையான சிறிய வேஷ்டி, உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும்.

பஜனை மண்டபத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, தபஸ்யாமிருதம் நடனப்பள்ளி வழங்கும் நாட்டியாஞ்சலி, தேவி நாட்டியாஞ்சலி வழங்கும் நாட்டிய நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...