பாரதியார் பல்கலை.யில் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் குறித்து சிறப்பு விரிவுரை நடைபெற்றது


பாரதியார் பல்கலைக் கழகத்தின் வரலாறு மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் வரலாறு சார்ந்த பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விரிவுரைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்பகுதியாக வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பொருளியல் என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை வரலாற்றுத் துறையின் முதலாம் ஆண்டு வகுப்பறையில் நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான முனைவர் மகேஸ்வரன் பங்கேற்றார். 

இதில், வரலாற்றுத் துறையின் தலைவர் முனைவர் பூபதி (பொறுப்பு) சிறப்பு விரிவுரையாளரை வரவேற்று உரை நிகழ்த்தி, துறையின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதைத்தொடர்ந்து மகேஸ்வரன் தனது உரையின் துவக்கத்தில் தொல்பொருளியல் குறித்தும், அத்துறையில் வரலாறு பயிலும் மாணாக்கருக்குள்ள வேலை வாய்ப்புகளைப் பற்றியும் விளக்கினார். 

பின், வரலாற்றுக்கு முற்பட்ட காலம், அதன் பிரிவுகள், அதன் பல்வேறு கூறுகள், அக்கால மக்களின் வாழ்வியல் குறித்து நமக்குக் கிடைத்த சான்றுகள் பற்றி விரிவுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு அரும்பொருட்களின் புகைப்படங்களைக் காட்டி, பல தகவல்கள் வழங்கப்பட்டன.

மேலும், மாணவ, மாணவியர் அரும்பொருட்கள் சேகரிப்பில் பங்கேற்று ஓர் அருங்காட்சியகம் அமைக்க முனைவர் மகேஸ்வரன் ஊக்கப்படுத்தினார். 

நிறைவாக வரலாறு மற்றும் சுற்றுலாத்துறையின் விரிவுரையாளரான சங்கீதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...