நீலகிரி மாவட்டம் கூடலூரில் மழையினால் சேதமடைந்த கூடலூர் - சுல்தான் பத்தேரி மற்றும் கூடலூர் - உதகை சாலைகளை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போடப்பட்டிருக்கும் சாலைகளின் தரத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் மழையினால் சேதமடைந்த சாலைகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கூடலூர் - சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட பகுதியில் புதிய தொழில் நுட்ப முறையை கொண்டு, மண் ஆணிகளை பொருத்த திட்டமிட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற்பட்ட விரிசல்களை ஆய்வு செய்த அமைச்சர் உதகை-கூடலூர் சாலை தலைக்குந்தா பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் தடிமன் மற்றும் சமமான நிலையில் சாலை உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, தலைக்குந்தா பகுதியில் மரக்கன்றுகளை அமைச்சர் ஏ.வ.வேலு நடவு செய்தார்.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தலைமைப் பொறியாளர்கள் பாலமுருகன் (தேசிய நெடுஞ்சாலை), சந்திரசேகரன் (நெடுஞ்சாலை), கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், கோட்டப்பொறியாளர்கள், முன்னாள் அரசு கொறடா முபாரக், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
அப்போது, கூடலூர் - சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட பகுதியில் புதிய தொழில் நுட்ப முறையை கொண்டு, மண் ஆணிகளை பொருத்த திட்டமிட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற்பட்ட விரிசல்களை ஆய்வு செய்த அமைச்சர் உதகை-கூடலூர் சாலை தலைக்குந்தா பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் தடிமன் மற்றும் சமமான நிலையில் சாலை உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து, தலைக்குந்தா பகுதியில் மரக்கன்றுகளை அமைச்சர் ஏ.வ.வேலு நடவு செய்தார்.
ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தலைமைப் பொறியாளர்கள் பாலமுருகன் (தேசிய நெடுஞ்சாலை), சந்திரசேகரன் (நெடுஞ்சாலை), கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், கோட்டப்பொறியாளர்கள், முன்னாள் அரசு கொறடா முபாரக், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.