குன்னூரில் ஹோம் மேட் சாக்லேட்டுகளை ருசி பார்த்த கரடி...!

குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள சாக்லேட் பேக்டரிக்குள் கரடி ஒன்று புகுந்து அங்கு தயாரித்து வைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளை உண்டு செல்வது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள தனியார் ஹாேம் மேட் சாக்லேட் (HOME MADE CHOCALATE) தயாரிக்கும் பேக்டரிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த சாக்லெட்களை உண்டு செல்வது தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள ஹை பீல்டு பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி, ஒன்று சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சிக்கிறது.



அது திறக்காததால் அருகில் இருந்த வேறு வழியாக தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

இதனால் இப்பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...