குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள சாக்லேட் பேக்டரிக்குள் கரடி ஒன்று புகுந்து அங்கு தயாரித்து வைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளை உண்டு செல்வது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹை பீல்டு பகுதியில் உள்ள தனியார் ஹாேம் மேட் சாக்லேட் (HOME MADE CHOCALATE) தயாரிக்கும் பேக்டரிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த சாக்லெட்களை உண்டு செல்வது தொழிற்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள ஹை பீல்டு பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி, ஒன்று சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சிக்கிறது.

அது திறக்காததால் அருகில் இருந்த வேறு வழியாக தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் சாலைகள், குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள ஹை பீல்டு பகுதியில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி, ஒன்று சாக்லெட் தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சிக்கிறது.
அது திறக்காததால் அருகில் இருந்த வேறு வழியாக தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்த கரடி அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருநத சாக்லெட்களை உண்டுவிட்டு சென்றுள்ளது.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடி மற்றும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.