பல்லடம் சாலையில் தேநீர் குடிப்பதற்காக கடைக்குள் சென்றவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் போலி சாவி போட்டு திருடிச் சென்ற நிலையில், புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அடுத்த பல்லடம் சாலையில் உணவகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று காலை பல்லடம் சாலையில் தனியார் உணவகத்திற்கு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது, மாரியப்பனும் அவரது நண்பரும் தனித்தனியே 2 இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.
இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, கடையிலிருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், போலி சாவியை போட்டு மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.
வெளியே வந்து பார்த்த போது, மாரியப்பன் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஒரு வழி பாதையில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று காலை பல்லடம் சாலையில் தனியார் உணவகத்திற்கு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது, மாரியப்பனும் அவரது நண்பரும் தனித்தனியே 2 இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.
இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, கடையிலிருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், போலி சாவியை போட்டு மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.
வெளியே வந்து பார்த்த போது, மாரியப்பன் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஒரு வழி பாதையில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.