உணவகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு - சிசிடிவி காட்சியை கொண்டு மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.

பல்லடம் சாலையில் தேநீர் குடிப்பதற்காக கடைக்குள் சென்றவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் போலி சாவி போட்டு திருடிச் சென்ற நிலையில், புகாரின் அடிப்படையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த பல்லடம் சாலையில் உணவகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் நேற்று காலை பல்லடம் சாலையில் தனியார் உணவகத்திற்கு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். அப்போது, மாரியப்பனும் அவரது நண்பரும் தனித்தனியே 2 இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளனர்.

இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது, கடையிலிருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், போலி சாவியை போட்டு மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார்.

வெளியே வந்து பார்த்த போது, மாரியப்பன் தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஒரு வழி பாதையில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...