திருப்பூர் வஞ்சி நகரில் மாணவ, மாணவிகளுக்காக இன்று முதல் தனியார் மினி பேருந்து சேவை துவக்கம் - துணை மேயர், மண்டல தலைவர் தொடங்கி வைப்பு.

வஞ்சி நகர் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பனியன் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் வசதிக்காக, இன்று முதல் இயக்கப்படவுள்ள 3 தனியார் மினி பேருந்துகளின் சேவை இன்று முதல் துவக்கி வைக்கப்பட்டது.


திருப்பூர்: வஞ்சி நகர் குடிசை மாற்று வாரிய பகுதிகளில் பேருந்து சேவை இல்லாததால் மாணவ - மாணவிகள் வசதிக்காக தனியார் பேருந்து சேவையை மாநகர துணை மேயர் மற்றும் மண்டல தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வஞ்சி நகர் குடிசை மாற்று வாரியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிருந்து ஏராளமான பள்ளி மாணவ - மாணவிகள் திருப்பூரில் உள்ள பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருகின்றனர்.

அதேபோல், ஏராளமான பொதுமக்கள் பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில், பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் நடந்து சென்று பயணிக்கும் சூழல் இருந்து வந்தது.

இதனை கருத்தில் கொண்டு மாமன்ற உறுப்பினர் அருணாச்சலம் கோரிக்கை வைத்ததையடுத்து, திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பரிந்துரை செய்ததன் பேரில், பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் வஞ்சி நகர் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து மூன்று தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.



இதில் ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணித்தனர். முதல் நாள் என்பதால் இன்று அனைவருக்கும் இலவசமாக பேருந்து இயக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...