கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் விவசாயிகளின் புகாரையடுத்து கல்குவாரிகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆய்வு

சாலைகள் சேதம், குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் விவசாயிகளின் புகாரையடுத்து கல்குவாரிகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் இன்று ஆய்வு செய்தார்.

கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூரில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்

இந்த புகாரையடுத்து, நெ10 முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளை கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார் மற்றும் கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகிறதா? விதிகளை மீறி வெடி வைக்கபடுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.



கல்குவாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் நாசமாவதோடு நிலத்தடி நீரும் குறைந்த வருவதாக, கனிமவளத்துறை அதிகாரியிடம், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

பின்னர், கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய கனிமவளத்துறை அதிகாரிகள் அரசு விதிமுறைகள் படி கல்குவாரியை நடத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...