சாலைகள் சேதம், குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் விவசாயிகளின் புகாரையடுத்து கல்குவாரிகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் இன்று ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூரில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்
இந்த புகாரையடுத்து, நெ10 முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளை கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார் மற்றும் கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகிறதா? விதிகளை மீறி வெடி வைக்கபடுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

கல்குவாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் நாசமாவதோடு நிலத்தடி நீரும் குறைந்த வருவதாக, கனிமவளத்துறை அதிகாரியிடம், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பின்னர், கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய கனிமவளத்துறை அதிகாரிகள் அரசு விதிமுறைகள் படி கல்குவாரியை நடத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூரில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரிகளை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்
இந்த புகாரையடுத்து, நெ10 முத்தூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளை கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சசிகுமார் மற்றும் கிணத்துக்கடவு வட்டாட்சியர் மல்லிகா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுகிறதா? விதிகளை மீறி வெடி வைக்கபடுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.
கல்குவாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு, குவாரியில் இருந்து வெளியேறும் புகையால் விவசாய பயிர்கள் நாசமாவதோடு நிலத்தடி நீரும் குறைந்த வருவதாக, கனிமவளத்துறை அதிகாரியிடம், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பின்னர், கல்குவாரி உரிமையாளர்களிடம் பேசிய கனிமவளத்துறை அதிகாரிகள் அரசு விதிமுறைகள் படி கல்குவாரியை நடத்த வேண்டும் என்று எச்சரிக்கைவிடுத்தனர்.