வால்பாறையில் 17 யானைகள் அடங்கிய கூட்டம் அட்டகாசம்..! எஸ்டேட் மருத்துவமனை, வீடு, கடையை இடித்து சேதம்

வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள அமல்தாஸ் என்பவருடைய மளிகை கடையின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



கோவை: வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த 17 யானைகள் அங்குள்ள மருத்துவமனை, வீடு, மளிகை கடை உள்ளிட்டவற்றை இடித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகள், மளிகை கடைகள் மற்றும் நியாய விலை கடைகள் போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள அமல்தாஸ் என்பவருடைய மளிகை கடையின் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.



இதனையடுத்து சரவணன் என்பவரது வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள், எஸ்டேட் மருத்துவமனையின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

நேற்று மாலையில் இருந்து தொலைபேசி தொடர்பு செயல்படாமல் இருந்ததால், யானைகள் நடமாட்டத்தை குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தாமதமாக தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...