'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்' புத்தகத்தை மக்களுக்கு வழங்கிய வழக்கு: கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் ஆஜர்

ஜெயலலிதா - சசிகலா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முரசொலியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" புத்தகத்தை மக்களுக்கு வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.


கோவை: "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு வழங்கியது குறித்த வழக்கில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் கோவை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" என்ற தலைப்பிட்டு முரசொலியில், ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து எழுதி இருந்தார்.

இந்த பிரதியை திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.



இதுதொடர்பாக போடப்பட்ட வழக்கில், திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், ஏ.பத்மநாபன், ராஜா, ஆனந்த், சோமசுந்தம் ஆகியோர் உள்ளிட்டோர் கோவை ஜெம் எம் எண் 1 நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி மீண்டும் 3 ந்தேதி அவர்களை ஆஜராக உத்திரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்கள் அகஸ்டஸ்,என்.ஆர்.விக்ரம், மருதுபாண்டியன் வினோத்குமார் சின்னத்துரை, அன்பு செழியன், வெங்கடாசலம் விஜயசேகரன் தாமோதரன் மற்றும் லிங்கராஜா ஆகியோர் ஆஜராகினர்.

பகுதிக்கழகச் செயலாளர்கள் வி.ஐ.பதுருதீன், மார்க்கெட் மனோகரன், நாகராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் டவுன் பா. ஆனந்தன், சாரமேடு பொறியாளர் அணி அமைப்பாளர் நா. பாபு, சபரிகோபால் வட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஹைவேஸ் தண்டபாணி, மற்றும் அக்ரி பாலு, பாலசுப்பிரமணியம், கஸ்தூரி அருண், தினேஸ், சி.என்.வேணுகோபால் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...