பல்லடம் அருகே குடியிருப்புக்கு அருகே எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு - 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பல்லடம் நகராட்சியின் 8வது வார்டுக்கு உட்பட்டபச்சாபாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியில்ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பச்சாபாளையம் ஓடையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து, கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது, எரிவாயு தகன மேடை மாற்று இடத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...