குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் நகராட்சியின் 8வது வார்டுக்கு உட்பட்டபச்சாபாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியில்ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பச்சாபாளையம் ஓடையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து, கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, எரிவாயு தகன மேடை மாற்று இடத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

பல்லடம் நகராட்சியின் 8வது வார்டுக்கு உட்பட்டபச்சாபாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியில்ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பச்சாபாளையம் ஓடையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 6,7,8 மற்றும் 16வது வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் எரிவாயு தகன மேடை அமைப்பதை கண்டித்து, கொசவம்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, எரிவாயு தகன மேடை மாற்று இடத்தில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.