25 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: முன்னாள் நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தியில்லை - மாற்றத்திற்கான அணியினர் பேட்டி

முன்னாள் நிர்வாகிகள் செயல்பாட்டில் திருப்தியில்லாததால், ஏராளமான திருப்பூரில் ஏராளமான தொழில்துறையினர் தொழிலை விட்டு சென்றுவிட்டதாகவும், நலிவடைந்த பின்னலாடை தொழிலை மீண்டும் மீட்டெடுக்கவே தேர்தல் நடத்தப்படுகிறது என மாற்றத்திற்கான அணியினர் தெரிவித்தனர்.


திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் 25 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் திருப்பூரில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த சங்கத்திற்கு நியமன அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வந்தது.

ஏற்கனவே இருந்த நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லை எனக்கூறி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினருக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவி மட்டும் நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் மாற்றத்திற்கான அணி என்ற பெயரில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடிய பாலச்சந்தர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.



பாலசந்தர் தலைமையில் மற்ற பதவிகளுக்கும் மாற்றத்திற்கான அணி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்த அணியினர் திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது, முன்னாள் நிர்வாகிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லை. அதன் காரணமாக திருப்பூரில் ஏராளமான தொழில்துறையினர் தொழிலை விட்டு சென்றுள்ளனர். நலிவடைந்த பின்னலாடை தொழிலை மீண்டும் மீட்டெடுக்க தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

தலைவர் பதவி மட்டும் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாற்றத்திற்கான அணி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் உறுப்பினர்கள் இருந்த சங்கத்தில் தற்போது இருநூறு பேர் மட்டுமே இருக்கின்றனர். மனுத்தாக்கலுக்கு பின்பு தொழில்துறையினரை சந்தித்ததன் மூலம் தற்போது 450 பேர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறையினர் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...