ஈஷாவில்‌ சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது நவராத்திரி திருவிழா - தினமும்‌ பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு

நவராத்திரி விழாவின் முதல் நாளையொட்டி ஈஷா மையத்தில் குங்கும அபிஷேகத்தில்‌ லிங்கபைரவி, தேவி துர்கையின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக காட்சியளித்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: ஈஷாவில் சிறப்பு பூஜைகளுடன் நவராத்திரி திருவிழா, நேற்று (26.09.2022) முதல் ககோலாகலமாக தொடங்கியது.

ஈஷாவில்‌ உள்ள லிங்க பைரவி தேவியின்‌ எல்லையில்லா அருளையும், சக்தியையும்‌ உணர நவராத்திரி நாட்கள்‌ மிகச்‌ சிறந்த காலக்கட்டமாக உள்ளது. அந்த வகையில்‌, நவராத்திரியின்‌ முதல்‌ நாளான நேற்று லிங்கபைரவி தேவி துர்கையின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக குங்கும அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து, மாலையில்‌ தேவியின்‌ உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நந்தியின்‌ முன்‌ மஹா ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வில்‌, திரளான பக்தர்கள்‌ பங்கேற்று சாமி தரிசனம்‌ செய்தனர்‌.

இதேபோல்‌, லிங்க பைரவி தேவி செப்‌டம்பர் 29 முதல்‌ அக்‌டோபர் 2ஆம் தேதி வரை லட்சுமியின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக மஞ்சள்‌ அபிஷேகத்திலும்‌, அக்‌டோபர் 2 முதல்‌ 4ஆம் தேதி வரை சரஸ்வதியின்‌ அம்சத்தை குறிக்கும்‌ விதமாக சந்தன அபிஷேகத்திலும்‌ காட்சியளிப்பார்‌.

செப்‌டம்பர் 29 மற்றும்‌ அக்டோபர் 2 ஆகிய தேதிகளில்‌ இரவு 7.30 மணிக்கு மஹா ஆரத்தி நடைபெறும்‌.



இதுதவிர, இவ்விழாவை மேலும்‌ சிறப்பிக்கும்‌ விதமாக பாரம்பரிய இசை மற்றும்‌ நடன கலைஞர்களின்‌ கிராமிய கலை நிகழ்ச்சகள்‌ தினமும்‌ மாலை 6.30 மணி முதல்‌ நடைபெறும்‌.



முதல்‌ நாளான நேற்று ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள்‌ 'த்ரிநயணி' என்ற பெயரில்‌ இசை நிகழ்ச்சியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...