கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் மாலைகளுடன் வந்து கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ஆனைமலை-நல்லாறு திட்ட பணிகளை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகளின் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேங்காய் மாலைகளுடன் வந்து கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை தமிழக அரசு உடனே துவங்க வேண்டும் என்று வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
பரம்பிக்குளம் பாசன திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்க கூடாது. தென்னைக்கு சோதனை, விவசாயிக்கு வேதனை. தேங்காய், மட்டை, காலி தொட்டிக்கும் விவசாயத்துக்கும் போதிய விலை இல்லை. தண்ணீரை தவறாக பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் நீர் திறப்பு பாசன கால்வாயை தவிர்த்து மற்ற பாசன கால்வாயில் உள்ள குளம், குட்டையை நீர் நிறப்ப ஆவணம் செய்ய வேண்டும்.
தற்போது பிஏபி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகள் யாவும் காற்றாலைகளாகவும் மாறி உள்ளது. இந்த நிலங்களை, பாசன திட்டத்தில் இருந்து நீக்கி மூன்று மண்டலமாக மாற்ற வேண்டும்.
பாசன விவசாயிகள் தென்னை சார்பில் தொழில் புரியும் விவசாயிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமிழக முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசன பகுதி கரையோர விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோயமுத்தூர் மாவட்ட குழுவிலிருந்து சு பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் துணை தலைவர் பெரியசாமி, சூலூர் எம்.எல்.ஏ. கந்தசாமி, பிஏபி கரையோர விவசாயிகள், கோவை, திருப்பூர் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாய கூட்டமைப்புகள், கொங்கு மண்டலம் மேற்கு பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.