டி.டி.எஃப்.வாசன் வழக்கு: போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்குக்காக மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கோவை - பாலக்காடு சாலையில், அதிவேகமாக, ஆபத்தான முறையில் பயணித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுக்கரை நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் டிடிஎஃப் வாசன் சரணடைந்த நிலையில், 2 பேர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


கோவை: பிரபல பைக்கரும், யூடியூபருமான டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் அதிவேகமாக இயக்கிய புகாரில் நேற்று காலை நீதிமன்றமன்றத்தில் சரணடைந்த நிலையில் மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் பைக்கர் டிடிஎஃப் வாசன். இவர் தனது பைக்கை வேகமாக ஓட்டுவதன் மூலமாகவே தற்போதைய இளைஞர்களிடையே பிரபலமானவர். இவரது யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளை வெகு விரைவாக கடக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களின் பரவின.



இதனிடையே, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை, டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் பின்னால் ஏற்றிக்கொண்டு, கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில், அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக பயணித்தார்.



அப்போது, பின்னால் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து, ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்கை வேகமாக இயக்கியதை வீடியோ பதிவு செய்து, டிடிஎஃப் வாசன் தனது Twin Thorttlers என்ற யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு, டிடிஎஃப் வாசன் மீது, போத்தனூர் காவல் நிலையத்தில் 279, 184 MV act மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் டி.டி.எஃப்.வாசனை தேடி வந்த நிலையில், நேற்று (26.09.2022) டி.டி.எஃப்.வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூட்டில் அமர்ந்திருந்தார். இதையடுத்து இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் டிடிஎஃப் வாசன், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சூலூர் வழக்கு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...