கோவை - பாலக்காடு சாலையில், அதிவேகமாக, ஆபத்தான முறையில் பயணித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுக்கரை நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் டிடிஎஃப் வாசன் சரணடைந்த நிலையில், 2 பேர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கோவை: பிரபல பைக்கரும், யூடியூபருமான டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் அதிவேகமாக இயக்கிய புகாரில் நேற்று காலை நீதிமன்றமன்றத்தில் சரணடைந்த நிலையில் மாலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவையை சேர்ந்தவர் பைக்கர் டிடிஎஃப் வாசன். இவர் தனது பைக்கை வேகமாக ஓட்டுவதன் மூலமாகவே தற்போதைய இளைஞர்களிடையே பிரபலமானவர். இவரது யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளை வெகு விரைவாக கடக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களின் பரவின.

இதனிடையே, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை, டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் பின்னால் ஏற்றிக்கொண்டு, கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில், அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக பயணித்தார்.

அப்போது, பின்னால் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து, ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்கை வேகமாக இயக்கியதை வீடியோ பதிவு செய்து, டிடிஎஃப் வாசன் தனது Twin Thorttlers என்ற யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு, டிடிஎஃப் வாசன் மீது, போத்தனூர் காவல் நிலையத்தில் 279, 184 MV act மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் டி.டி.எஃப்.வாசனை தேடி வந்த நிலையில், நேற்று (26.09.2022) டி.டி.எஃப்.வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூட்டில் அமர்ந்திருந்தார். இதையடுத்து இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் டிடிஎஃப் வாசன், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சூலூர் வழக்கு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.
கோவையை சேர்ந்தவர் பைக்கர் டிடிஎஃப் வாசன். இவர் தனது பைக்கை வேகமாக ஓட்டுவதன் மூலமாகவே தற்போதைய இளைஞர்களிடையே பிரபலமானவர். இவரது யூடியூப் சேனலுக்கு ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்வைகளை வெகு விரைவாக கடக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களின் பரவின.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி டிக்டாக் மூலம் பிரபலமான யூடியூபர் ஜி.பி.முத்துவை, டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் பின்னால் ஏற்றிக்கொண்டு, கோவை பாலக்காடு சாலையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில், அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் விதமாக பயணித்தார்.
அப்போது, பின்னால் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து, ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்கை வேகமாக இயக்கியதை வீடியோ பதிவு செய்து, டிடிஎஃப் வாசன் தனது Twin Thorttlers என்ற யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு, டிடிஎஃப் வாசன் மீது, போத்தனூர் காவல் நிலையத்தில் 279, 184 MV act மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் டி.டி.எஃப்.வாசனை தேடி வந்த நிலையில், நேற்று (26.09.2022) டி.டி.எஃப்.வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூட்டில் அமர்ந்திருந்தார். இதையடுத்து இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் டிடிஎஃப் வாசன், நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சூலூர் வழக்கு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது.