கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் மூடப்பட்ட கோவை குற்றாலம், இன்று முதல் (செப் 27) சுற்றுலாவிற்கு திறக்கப்படுவதாக கோவை வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தொடர் மழை முடிந்து, நீர்வரத்து குறைந்துள்ளதால் கோவை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று, செப் 27-ம் முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அருவிகளில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கபடுவது வழக்கம்.

அதேபோல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது .

இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, காலை, 10:00 முதல் 11:00 மணி, காலை, 11:30 முதல் மதியம், 12:30 மணி, மற்றும் மதியம், 1:00 முதல் 2:00 மணி வரை என, நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று அட்டவணைகளின்படி, அனுமதி அளிக்கப்படும்.

காலை, 10:00 மணிக்கு அனுமதி சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம், 1:00 மணிக்குள் வெளியேற வேண்டும்

இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...