வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் மூடப்பட்ட கோவை குற்றாலம், இன்று முதல் (செப் 27) சுற்றுலாவிற்கு திறக்கப்படுவதாக கோவை வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தொடர் மழை முடிந்து, நீர்வரத்து குறைந்துள்ளதால் கோவை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று, செப் 27-ம் முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அருவிகளில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கபடுவது வழக்கம்.
அதேபோல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது .
இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, காலை, 10:00 முதல் 11:00 மணி, காலை, 11:30 முதல் மதியம், 12:30 மணி, மற்றும் மதியம், 1:00 முதல் 2:00 மணி வரை என, நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று அட்டவணைகளின்படி, அனுமதி அளிக்கப்படும்.
காலை, 10:00 மணிக்கு அனுமதி சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம், 1:00 மணிக்குள் வெளியேற வேண்டும்
இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அருவிகளில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கபடுவது வழக்கம்.
அதேபோல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது .
இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, காலை, 10:00 முதல் 11:00 மணி, காலை, 11:30 முதல் மதியம், 12:30 மணி, மற்றும் மதியம், 1:00 முதல் 2:00 மணி வரை என, நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று அட்டவணைகளின்படி, அனுமதி அளிக்கப்படும்.
காலை, 10:00 மணிக்கு அனுமதி சீட்டு பெற்று, நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம், 1:00 மணிக்குள் வெளியேற வேண்டும்
இவ்வாறு வனத்துறை தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.