உக்கடம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..!

புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த காய்கறி வியாபாரி மற்றும் சி.எம்.சி. காலனியை சேர்ந்த நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: உக்கடம் அருகேயுள்ள புல்லுக்காடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உக்கடம் அடுத்த புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், போலீசார் அப்பகுதி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பெரியக்கடை வீதி காவல் நிலைய, துணை ஆய்வாளர் கோமதி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (20) மற்றும் சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்கம் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...