உக்கடம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..!

புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த காய்கறி வியாபாரி மற்றும் சி.எம்.சி. காலனியை சேர்ந்த நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: உக்கடம் அருகேயுள்ள புல்லுக்காடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உக்கடம் அடுத்த புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், போலீசார் அப்பகுதி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பெரியக்கடை வீதி காவல் நிலைய, துணை ஆய்வாளர் கோமதி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில், புல்லுக்காடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த காய்கறி வியாபாரி நவுபல் ரகுமான் (20) மற்றும் சி.எம்.சி. காலனியை சேர்ந்த சூர்யா (18) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ.3,100 ரொக்கம் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...