வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த வாக்ரி மொழி பேசக்கூடிய 'நக்கலே' என்ற குருவிக்காரன் சமுதாயத்தை குறவன் சமுதாயத்தில் சேர்க்கப்பட்டதை கண்டித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் போராட்டம்.
திருப்பூர்: குருவிக்காரன் சமூகத்திற்கு குறவர் சமூகம் என்ற பெயரை வைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அடையாள ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த வாக்ரி மொழி பேசக்கூடிய "நக்கலே" என்ற குருவிக்காரன் சமுதாயத்திற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தாய்குடி பெயரான குறவன் என்ற பெயரை சூட்டியது.

இதன்மூலம் வரலாற்று பிழையை ஏற்படுத்தி விட்டதாக கூறி, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்து நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும், தமிழ் குறவர்களை பழங்குடியினர், எஸ்.டி பட்டியலில் சேர்த்திட மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர், தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வட மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு குடிப்பெயர்ந்த வாக்ரி மொழி பேசக்கூடிய "நக்கலே" என்ற குருவிக்காரன் சமுதாயத்திற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தாய்குடி பெயரான குறவன் என்ற பெயரை சூட்டியது.
இதன்மூலம் வரலாற்று பிழையை ஏற்படுத்தி விட்டதாக கூறி, குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்து நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வேண்டும், தமிழ் குறவர்களை பழங்குடியினர், எஸ்.டி பட்டியலில் சேர்த்திட மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர், தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.