சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் வர்ணாசிரம பாகுபாடு கற்பிப்பு - பாட நகலை கிழித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம், கைது..!

மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் வர்ணாசிரம முறைகள் என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகளை கற்பிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட த.பெ.தி.க வினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பாட நகலை கிளித்தெரிந்து ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.



மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வர்ணாசிரம முறைகள் என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகளை கற்பித்தும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் எனவும் பிளவுபடுத்தி பாடம் கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடை கற்பிப்பதற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்

இதைத்தொடர்ந்து இன்று சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசிரமம் பாடம் இடம் பெற்று இருக்கும் பாடப்பிரிவு நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



சாதி வேறுபாடுகளை பற்பித்து சூத்திரர்கள், பஞ்சமர்கள் என இழிவுபடுத்தும் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர் 15 பேரைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த போலீசார் கைது செய்தனர்.



இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச் செயலாளருக்கு கு.ராமகிருஷ்ணன் :



சிபிஎஸ்சி பள்ளிகளில் வர்ணாசிரம முறை என்ற பெயரில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிராமணர், சூத்திரர் என்பவர்கள் யார் என்பதை வகைப்படுத்தி மாணவர்கள் மத்தியில் சாதி வெறியை தூண்டி வருகின்றனர்.

அதேபோல, தலித்துகள் இறந்த விலங்குகளை அறுப்பதும் உண்பதும் தான் என பாடத்திட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

கோவை வரும் பாஜக மாநில தலைவர்அண்ணாமலை முதலில் இந்த பாடத்திட்டத்தை நீக்க போராட்டம் நடத்தட்டும். இதை கேட்க முடியாத அண்ணாமலை ஆ.ராசா கருத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதா? என கேள்வி எழுப்பினார்.

எனவே, உடனடியாக மத்திய அரசு அந்தப் பாடத்தை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...