உதகை மார்லிமந்து அணை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் தாக்கி கால்நடைகள் படுகாயம்

மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன. கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா?அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


நீலகிரி: உதகை மார்லிமந்து அணை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வனவிலங்குகள் தாக்கி கால்நடைகள் படுகாயம் அடைந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகளில் ஒன்று தான் மார்லிமந்து அணை.

இந்த நிலையில், இன்று மார்லிமந்து அணைப் பகுதியில் வனவிலங்குகள் தாக்கியதில், ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாடுகள் படுகாயமடைந்தன.



இப்பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால் கால் நடைகளை தாக்குவது செந்நாய்களா? அல்லது சிறுத்தையா..? என உறுதியாக தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த பாதிக்கப்பட்ட கால்நடையின் உரிமையாளர்கள், வனவிலங்குகளால் படுகாயமடைந்துள்ள கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...