கோவையில் திருநங்கைகள் சார்பில் நடைபெற்ற 'பாலினம் மற்றும் காலநிலை மாற்றம்' நிகழ்ச்சி

பேரிடர் காலங்களில் திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.



கோவை: கோவையில் திருநங்கைகள் நலனை காக்க வலியுறுத்தி "பாலினம் மற்றும் காலநிலை மாற்றம்" நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவையில் திருநங்கைகள் உரிமை ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் மற்றும் சகோதரி அறக்கட்டளை இணைந்து "பாலினம் மற்றும் காலநிலை மாற்றம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கல்கி சுப்ரமணியம் பேசியதாவது. அதிகம் மழை வெள்ளம், தொற்று நோய் மற்றும் சுனாமி போன்றவற்றால் ஏராளமான திருநங்கைகள் இடம் மாறி அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு உள்ளது. என கூறினார்

இதனை தொடர்ந்து திருநங்கைகள் சமூக சேவகர் சௌந்தர்யா கோபி பேசியதாவது:



தொற்று நோயின் பொது தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட கடுமையாக அவதிப்பட்டனர். சிறு தொழில் தொடங்கியவர்கள் அதை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் அதை தொடங்க முடியவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய செல்வி கார்த்திகா, 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். உடைமைகளை அனைத்தும் இழந்தேன். இப்போது உணவு கடை ஒன்றை தொடங்கி நடத்தி வந்தேன்.

இந்நிலையில் கடை மழையில் அடித்துச் சென்றது. அன்று முதல் நான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன் அது இன்றும் தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கேட்டரிங் தொழில் நடத்தும் பிரேமா நடராஜன் கூறுகையில், தொற்று நோயின் போதும் கன மழையின் போதும் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க முடியவில்லை. மாத வாடகை செலுத்த முடியாததால் கடந்த மூன்று வருடங்களில் பலமுறை எனது வீட்டை மாறினேன்.

திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...