கடந்த இரு தினங்களாக கோவையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையின் எதிரொலியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கடந்த இரு தினங்களாக கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்களின் எதிரொலியாக கிணத்துக்கடவு பகுதிகளில் வாகனத் தணிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வாகனங்கள், அலுவலகங்கள் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசி சென்றுள்ள சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கோவை மாவட்டம் முழுவதும் கமாண்டோ படையினர், அதிவிரைவு படையினர், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் என 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் வாகனங்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் நபர்கள் இருந்தால் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வாகனங்கள், அலுவலகங்கள் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசி சென்றுள்ள சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கோவை மாவட்டம் முழுவதும் கமாண்டோ படையினர், அதிவிரைவு படையினர், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் என 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வாகனங்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் நபர்கள் இருந்தால் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.