கிணத்துக்கடவில் வாகன தணிக்கை தீவிரம்; பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை

கடந்த இரு தினங்களாக கோவையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையின் எதிரொலியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கடந்த இரு தினங்களாக கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்களின் எதிரொலியாக கிணத்துக்கடவு பகுதிகளில் வாகனத் தணிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வாகனங்கள், அலுவலகங்கள் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசி சென்றுள்ள சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் கமாண்டோ படையினர், அதிவிரைவு படையினர், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் என 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.



மேலும் வாகனங்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் நபர்கள் இருந்தால் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...