கிணத்துக்கடவு அருகே பெட்டிகடை, பேக்கரியில் சுகாதாரத்துறையினர் சோதனை; குட்கா பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் பெட்டிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட சில்லரை வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் பெட்டிகடை மற்றும் பேக்கரியில் சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்று சோதனை மேற்கொண்டனர்.



கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர், சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜாவேல், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், ஆனந்த், கௌதம், இன்ப அரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் குட்கா விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்று வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...