கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் பெட்டிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட சில்லரை வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் பெட்டிகடை மற்றும் பேக்கரியில் சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்று சோதனை மேற்கொண்டனர்.

கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர், சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜாவேல், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், ஆனந்த், கௌதம், இன்ப அரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் குட்கா விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்று வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்று சோதனை மேற்கொண்டனர்.
கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர், சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜாவேல், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், ஆனந்த், கௌதம், இன்ப அரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் குட்கா விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்று வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.