திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள், விசா காலாவதி ஆகியும் ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திருப்பூர்: விசா காலாவதி ஆகியும் திருப்பூரில் தங்கி இருந்த இரண்டு நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் , தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள்,தற்போது ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருவரும் வைத்திருந்தவிசா காலாவதியாகிய நிலையில், இருவரும் சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த சிக்கா அஸ்டின், பிரோன்வு மோசஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் வடக்கு போலீசார் ராயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவரையும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் , தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்தவர்கள்,தற்போது ராயபுரம் பகுதியில் தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருவரும் வைத்திருந்தவிசா காலாவதியாகிய நிலையில், இருவரும் சட்ட விரோதமாக திருப்பூரில் தங்கி பனியன் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நைஜீரியா நாட்டை சேர்ந்த சிக்கா அஸ்டின், பிரோன்வு மோசஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.