ராக்கியாபாளையம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: ராக்கியாபாளையம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேகப்பிரிவு ஆசிரியராக பொறுப்பு வகித்து வருகிறார். ஜெய்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவரது வீட்டின் விலாசத்தை கேட்டுக் கொண்டு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்தவர்களிடம் பிரபுவின் வீட்டை கேட்டு உறுதி படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த கற்களை எடுத்து அவரது வீட்டில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் சேதமடைந்துள்ளன.

சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள், இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்த தகவல்கள் பரவிய நிலையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அப்பகுதியில் கூடியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேகப்பிரிவு ஆசிரியராக பொறுப்பு வகித்து வருகிறார். ஜெய்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவரது வீட்டின் விலாசத்தை கேட்டுக் கொண்டு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்தவர்களிடம் பிரபுவின் வீட்டை கேட்டு உறுதி படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த கற்களை எடுத்து அவரது வீட்டில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் சேதமடைந்துள்ளன.
சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள், இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்த தகவல்கள் பரவிய நிலையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அப்பகுதியில் கூடியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.