திருப்பூரில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு - பரபரப்பு..!

ராக்கியாபாளையம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: ராக்கியாபாளையம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேகப்பிரிவு ஆசிரியராக பொறுப்பு வகித்து வருகிறார். ஜெய்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவரது வீட்டின் விலாசத்தை கேட்டுக் கொண்டு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.



இந்நிலையில் அங்கிருந்தவர்களிடம் பிரபுவின் வீட்டை கேட்டு உறுதி படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த கற்களை எடுத்து அவரது வீட்டில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் சேதமடைந்துள்ளன.



சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள், இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.



இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் குறித்த தகவல்கள் பரவிய நிலையில், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அப்பகுதியில் கூடியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...