பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் எதிரொலியாக 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு, பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை: அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக, கோவை மாநகரில் பாதுகாப்புக்காக 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 100 அடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டல தலைவருக்கு சொந்தமான கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக கோவை மாநகரில் 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 100 அடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டல தலைவருக்கு சொந்தமான கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக கோவை மாநகரில் 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.