கோவை மாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி - பாதுகாப்புக்காக 4 கம்பெனி சிறப்புக் காவல்படை குவிப்பு

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் எதிரொலியாக 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு, பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.


கோவை: அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக, கோவை மாநகரில் பாதுகாப்புக்காக 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.



கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இந்நிலையில் இன்று காலை 100 அடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டல தலைவருக்கு சொந்தமான கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர்.



இதன் காரணமாக கோவை மாநகரில் 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...