சிறுமுகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காட்டுப்பன்றி மோதியதில் லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற லாரி ஓட்டுனர் மீது காட்டுப்பன்றி மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காட்டுப்பன்றி மோதியதில் லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமுகை அருகேயுள்ள பெத்திக்குட்டை அருகேயுள்ள புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(35). லாரி ஓட்டுனரான இவர், நேற்றிரவு சுமார் 10 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் புளியம்பட்டியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக புதுக்காடு நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், பெத்திக்குட்டை அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கனகராஜ் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், அவ்வழியாக சென்றவர்கள், அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...