கோவையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு கண்டெடுப்பு: மூன்று தனிப்படை அமைப்பு - காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் வெரைட்டி ஹால் ரோட்டில் பெட்ரோல் மற்றும் கரசின் நிரப்பப்பட்ட பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை அடுத்து கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாநகர மாவட்ட அலுவலகம் முன்பாக கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்பட்டு திரியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெரைட்டி ஹால் ரோடில், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட விளக்கு ஒன்று ஒரு கடையின் முன்பு கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவங்களை விசாரிக்க துணை ஆணையர் வின்சென்ட் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையாளர் வி பாலகிருஷ்ணன், அசம்பாவிதத்தை நடத்த முயற்சி செய்தவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, லாட்ஜில் தங்கி இருப்போர், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக செல்வோரிடம் விசாரணை என அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்து மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு சம்பவங்களால் கோவை மாநகரம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...