ஈமு கோழி மோசடி: தம்பதிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை, ரூ.2.24 கோடி அபராதம் - இருவருக்கும் பிடிவாரண்ட் - கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு.

ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2.24கோடி அபராதம் விதித்த நீதிபதி, ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


கோவை: திருப்பூர் மாவட்டத்தில் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில், கணவன் - மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கோவை நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் ரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவசேனாபதி(45). இவர், தாராபுரம் சாலையில் சிவா ஈமு பார்ம் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி மோகன பிரியதர்ஷினி(40) மற்றும் தாயார் பத்மாவதி (65)

ஆகியோரும் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் 'டெபாசிட்' செய்தால் மாதம் ரூ.10,000 வட்டி மற்றும் ஆண்டுதோறும் ரூ.10,000 போனஸ் மற்றும் 2 ஆண்டுகள் கழித்து டெபாசிட் தொகை முழுவதையும் திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதற்காக 31 இடங்களில் கிளை அலுவலகம் திறந்து 337 பேரிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். சில மாதங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு வட்டி பணத்தைகொடுத்து வந்த இவர், திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டு, சிவசேனாபதி அவரது மனைவி மோகன பிரியதர்ஷினி மற்றும் தாயார் பத்மாவதி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி ரவி தீர்ப்பை வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட சிவசேனாபதி மற்றும் அவரது மனைவி மோகன பிரியதர்ஷினி ஆகியோருக்கு மோசடி செய்த குற்றத்திற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டப்பிரிவு 5-ன் கீழான குற்றத்திற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், 2.42 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். தாயார் பத்மாவதி விடுவிக்கப்பட்டார்.

தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளதால் மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...