எம்.பி. ஆ. ராசாவை ஒருமையில் மற்றும் இரு தரப்பினரையிடையே வன்முறையை தூண்டும் படி பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது தபெதிகவினர் புகார் மனு

கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் ஆ.ராசாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய, பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, எம்.பி ஆ.ராசா குறித்து ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். பீளமேடு காவல் நிலையத்தில், தபெதிகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் அச்சுறுத்தும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி தபெதிகவினர் மனு.

கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசாவை போலீஸ் காவல் இல்லாமல் தைரியம் இருந்தால் கோவை மாவட்டத்திற்குள் வர சொல்... என்று அச்சுறுத்தும் வகையில் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

மேலும், தந்தை பெரியாரை ஒருமையில் பேசி இரு தரப்பினரையிடையே வன்முறையை தூண்டும் வகையில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பேசியுள்ளார்.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில், ஆ.ராசா மற்றும் பெரியார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதோடு, இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி த.பெ.திகவினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



புகாரளிக்க வந்து நீண்ட நேரம் ஆகியும் போலீசார் புகார் மனுவை பெறவில்லை என தபெதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...