கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் ஆ.ராசாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய, பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, எம்.பி ஆ.ராசா குறித்து ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். பீளமேடு காவல் நிலையத்தில், தபெதிகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் அச்சுறுத்தும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி தபெதிகவினர் மனு.
கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசாவை போலீஸ் காவல் இல்லாமல் தைரியம் இருந்தால் கோவை மாவட்டத்திற்குள் வர சொல்... என்று அச்சுறுத்தும் வகையில் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
மேலும், தந்தை பெரியாரை ஒருமையில் பேசி இரு தரப்பினரையிடையே வன்முறையை தூண்டும் வகையில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பேசியுள்ளார்.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில், ஆ.ராசா மற்றும் பெரியார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதோடு, இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி த.பெ.திகவினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரளிக்க வந்து நீண்ட நேரம் ஆகியும் போலீசார் புகார் மனுவை பெறவில்லை என தபெதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசாவை போலீஸ் காவல் இல்லாமல் தைரியம் இருந்தால் கோவை மாவட்டத்திற்குள் வர சொல்... என்று அச்சுறுத்தும் வகையில் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
மேலும், தந்தை பெரியாரை ஒருமையில் பேசி இரு தரப்பினரையிடையே வன்முறையை தூண்டும் வகையில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பேசியுள்ளார்.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில், ஆ.ராசா மற்றும் பெரியார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதோடு, இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி த.பெ.திகவினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரளிக்க வந்து நீண்ட நேரம் ஆகியும் போலீசார் புகார் மனுவை பெறவில்லை என தபெதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.