கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரில், ஐவர் குற்றவாளிகள் என்றும் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கோவை: கடந்த 2018 ஆம் ஆண்டு, கோவை தடாகம் சாலை வேளாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் 2,000 நோட்டுகளை ரூ.1.18 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் அடித்ததாக மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெராக்ஸ் இயந்திரம், கணினிகள் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இது வரை கோவையை சேர்ந்த ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், ஹரி, திருப்பூரை சேர்ந்த விஜயகுமார், உதயபிரகாஷ், ராஜேஷ் ஆகிய 7 பேரை கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆனந்த உட்பட 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தீர்ப்பு விபரம்:

ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், உதயபிரகாஷ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம், விஜயகுமார் என்பவருக்கு 7 ஆண்டு சிறை 7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் கைது செய்யப்பட்ட, ஹரி, ராஜேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...