கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரில், ஐவர் குற்றவாளிகள் என்றும் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கோவை: கடந்த 2018 ஆம் ஆண்டு, கோவை தடாகம் சாலை வேளாண்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் 2,000 நோட்டுகளை ரூ.1.18 கோடி அளவிற்கு கள்ள நோட்டுகள் அடித்ததாக மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெராக்ஸ் இயந்திரம், கணினிகள் மற்றும் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இது வரை கோவையை சேர்ந்த ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், ஹரி, திருப்பூரை சேர்ந்த விஜயகுமார், உதயபிரகாஷ், ராஜேஷ் ஆகிய 7 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆனந்த உட்பட 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தீர்ப்பு விபரம்:
ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், உதயபிரகாஷ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம், விஜயகுமார் என்பவருக்கு 7 ஆண்டு சிறை 7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் கைது செய்யப்பட்ட, ஹரி, ராஜேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் இது வரை கோவையை சேர்ந்த ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், ஹரி, திருப்பூரை சேர்ந்த விஜயகுமார், உதயபிரகாஷ், ராஜேஷ் ஆகிய 7 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஆனந்த உட்பட 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தீர்ப்பு விபரம்:
ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், உதயபிரகாஷ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் 12,500 அபராதம், விஜயகுமார் என்பவருக்கு 7 ஆண்டு சிறை 7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் கைது செய்யப்பட்ட, ஹரி, ராஜேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.