அதிக வட்டி தருவதாக கூறி உடன் வேலை செய்பவர்களிடம் பல லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியது தொடர்பான பாமக நிர்வாகியின் புகாரின் பேரில், ரேணு பிரியா என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட ரேணுபிரியா என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்ட பாமக செயலாளராக இருந்து வருபவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், ரேணுபிரியா என்ற பெண் தன்னுடன் வேலை. செய்யும் நபர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.
பணம் கொடுத்தவர்கள் ரேணுபிரியாவிடம் பணத்தை திரும்ப கேட்டால், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுந்தர் என்பவரை வைத்து மிரட்டி வருகிறார்.
கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ள இந்த பெண் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் சுந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியா தற்போது திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியாவை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட பாமக செயலாளராக இருந்து வருபவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகார் மனுவில், ரேணுபிரியா என்ற பெண் தன்னுடன் வேலை. செய்யும் நபர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.
பணம் கொடுத்தவர்கள் ரேணுபிரியாவிடம் பணத்தை திரும்ப கேட்டால், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுந்தர் என்பவரை வைத்து மிரட்டி வருகிறார்.
கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ள இந்த பெண் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் சுந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியா தற்போது திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியாவை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.