அதிக வட்டி தருவதாக கூறி கோடி கணக்கில் நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் - பா.ம.க நிர்வாகி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு..!

அதிக வட்டி தருவதாக கூறி உடன் வேலை செய்பவர்களிடம் பல லட்சம் வாங்கிக்‌ கொண்டு ஏமாற்றியது தொடர்பான பாமக நிர்வாகியின் புகாரின் பேரில், ரேணு பிரியா என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட ரேணுபிரியா என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்ட பாமக செயலாளராக இருந்து வருபவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், ரேணுபிரியா என்ற பெண் தன்னுடன்‌ வேலை. செய்யும்‌ நபர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் வாங்கிக்‌ கொண்டு ஏமாற்றி உள்ளார்.

பணம் கொடுத்தவர்கள்‌ ரேணுபிரியாவிடம் பணத்தை திரும்ப கேட்டால், காங்கிரஸ்‌ கட்சியின்‌ மாநில பொதுச்‌ செயலாளர்‌ சுந்தர்‌ என்பவரை வைத்து மிரட்டி வருகிறார்‌.

கோடிக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ள இந்த பெண் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் சுந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியா தற்போது திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட ரேணு பிரியாவை தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...