சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, சின்ன மேட்டுபாளையம் நீர் உந்து நிலையத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து சின்னமேட்டுபாளையம் நீர் உந்து நிலையத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக வெள்ளக்கிணறு, உடையம்பாளையம், நஞ்சை கவுண்டம்புதூர், சுப்பநாயக்கன்புதூர், சின்ன மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீர்மானிக்கப்பட்ட குடிநீர் குறை இல்லாமல் வழங்கிடக் கோரி மாமன்ற உறுப்பினர்கள், 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் சின்னமேட்டுப்பாளையம் நீர் உந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாமன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக வெள்ளக்கிணறு, உடையம்பாளையம், நஞ்சை கவுண்டம்புதூர், சுப்பநாயக்கன்புதூர், சின்ன மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீர்மானிக்கப்பட்ட குடிநீர் குறை இல்லாமல் வழங்கிடக் கோரி மாமன்ற உறுப்பினர்கள், 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் சின்னமேட்டுப்பாளையம் நீர் உந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.