10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: நீர் உந்து நிலையத்தில் வார்டு 12, 13, 14 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, சின்ன மேட்டுபாளையம் நீர் உந்து நிலையத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து சின்னமேட்டுபாளையம் நீர் உந்து நிலையத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



குறிப்பாக வெள்ளக்கிணறு, உடையம்பாளையம், நஞ்சை கவுண்டம்புதூர், சுப்பநாயக்கன்புதூர், சின்ன மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீர்மானிக்கப்பட்ட குடிநீர் குறை இல்லாமல் வழங்கிடக் கோரி மாமன்ற உறுப்பினர்கள், 12 வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் வி. ராமமூர்த்தி, 13 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் சுமதி, 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா ஆகியோர் சின்னமேட்டுப்பாளையம் நீர் உந்து நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாமன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...