கோவையில் பரபரப்பு..! ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்..!

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு மற்றும் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து 9 மாணவிகள் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.



மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் 3 பேர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.



இதனை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...