கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு மற்றும் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து 9 மாணவிகள் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் 3 பேர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் அங்கு பயின்று வரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து 9 மாணவிகள் பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மாணவிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மாநகராட்சி மற்றும் சுகாதார அதிகாரிகள் 3 பேர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.