அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த பெண்கள் - அனுமதி அளிக்காததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா..!

தண்டுக்காரன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு அளிக்க வந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டுக்காரன்பாளையம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையால், பெண்கள் பாதிக்கப்படுவதால் கடையை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அமிலம் கலந்த மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் அதை அருந்தும் ஆண்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலநிலை இருப்பதாக பெண்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.



எனவே, மக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக உள்ள கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



இந்நிலையில், கூட்டமாக வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால், அதிருப்தியடைந்த பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தர்ணா போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியரை சந்தித்து மதுபான கடையை அகற்றக்கோரி மனுவை அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...