கந்து வட்டி கொடுமை - ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நெசவாளர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

அன்னூர் பதுவம்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி, பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய ரூ. 3 லட்ச கடனை வட்டியுடன் ரூபாய். 5 லட்சமாக கட்டியும், பத்திரத்தை கொடுக்காமல் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.



கோவை அன்னூர் பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி. மாற்றுத்திறனாளியான இவர், நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயராம் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 3 லட்சத்தை கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், வட்டியுடன் சேர்ந்து ரூ.5 லட்சம் கட்டிய நிலையில், பத்திரத்தை தராமல் ஜெயராமன் மிரட்டி வருவதாககூறி, இன்று காலை கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமசாமி திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.



இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறைதீர்ப்பு நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...