அன்னூர் பதுவம்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி, பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய ரூ. 3 லட்ச கடனை வட்டியுடன் ரூபாய். 5 லட்சமாக கட்டியும், பத்திரத்தை கொடுக்காமல் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.
கோவை அன்னூர் பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி. மாற்றுத்திறனாளியான இவர், நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயராம் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 3 லட்சத்தை கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார்.
இந்நிலையில், வட்டியுடன் சேர்ந்து ரூ.5 லட்சம் கட்டிய நிலையில், பத்திரத்தை தராமல் ஜெயராமன் மிரட்டி வருவதாககூறி, இன்று காலை கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமசாமி திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறைதீர்ப்பு நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.